சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்


1. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே - அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம் - (சிங்கார மாளிகையில்)

2. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் - அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார் - (சிங்கார மாளிகையில்)

3. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் - புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம் - (சிங்கார மாளிகையில்)

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே - அவர்
வரும்வேளை அறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம் - (சிங்கார மாளிகையில்)

தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9