இறைவன் நமது வானகத் தந்தை
இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை
குறைகள் தீரும் கவலைகள் மாறும்
குழம்பிய மனதில் அமைதி வந்தேறும்

1. பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை
பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை
மறந்து விடாமல் அவைகளுக்குணவு - 2
வாரி வழங்கி - பேணியே காக்கும் (3)

2. வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள்
வருந்தி உழைப்பதும் நூற்பதுமில்லை
மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் - 2
மன்னனும் என்றும் - உடுத்தியதில்லை (3)

3. எதனை உண்போம் எதனை உடுப்போம்
எதனைக் குடிப்போம் எனத் திகைக்காதே
முதலில் பரமனின் அரசின் நீதியை - 2
முனைந்து தேடிடு - சித்திக்கும் அனைத்தும் (3)


தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9