இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை - 2

இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை

1. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் - 2
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய் - 2 - ( இஸ்ரவேலைக் காக்கும் தேவன் )


2. தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார் - 2
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார் - 2 - ( இஸ்ரவேலைக் காக்கும் தேவன் )

3. வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார் - 2
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார் - 2 - ( இஸ்ரவேலைக் காக்கும் தேவன் )

4. சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார் - 2
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார் - 2 - ( இஸ்ரவேலைக் காக்கும் தேவன் )

தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9