என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா - 2

பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினை பார் - 2
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய் - 2 - (என்னை நேசிக்கின்றாயா)


பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார் - 2
உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா - 2 - (என்னை நேசிக்கின்றாயா)

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால் - 2
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே
ஓடி வந்தேன் மானிடனாய் - 2

உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பேனோ - 2
நேசியாமல் இருப்பேனோ
நேசியாமல் இருப்பேனோ


தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9