எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் - 2

அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே - 2
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனைச் சந்திப்போமே - 2 - (எக்காள சத்தம் வானில்)


வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே - 2
தேவதூதர் பாடல் தொனிக்கத்
தேவன் அவரையே தரிசிப்போமே - 2 - (எக்காள சத்தம் வானில்)

கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் - 2
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார் - 2 - (எக்காள சத்தம் வானில்)

கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் - 2
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் - 2 - (எக்காள சத்தம் வானில்)


தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9