ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! - ஆமென்

1. வெற்றிகொண்டார்ப் பரித்து - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து - முறித்து
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் - ஆமென்

2. சாவின் கூர் ஒடிந்து - மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே விடிந்து - தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது - ஆமென்

3. வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் - ஆமென்


தேடுதல்

இன்றைய வசனம்

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.


சகரியா 9:9